தினசரி சுத்தம்
கால்நடைப் பண்ணை தினசரி சுத்தம் செய்வது பல நுண்ணுயிரிகள் மூலம் பரவும் தொற்று நோயைத் தடுக்க உதவும். சுகாதாரமான பராமரிப்பிற்கு தினசரி நல்ல தண்ணீர் விட்டு கொட்டகையைக் கழுவுதல், சாணியை சுத்தப்படுத்துதல் முறையான வடிகால் வசதி அமைத்தல் போன்றவை அவசியம். இது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து காக்க உதவும்.
பால்பண்ணையின் சுகாதாரம்
பால் கறக்கும் இடம் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம். இல்லையெனில் பசுக்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதியுறும். மேலும் பாதிக்கப்பட்ட பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் நீண்ட நேரம் பயன்படுத்த உதவாது. அதை அருந்தும் மனிதர்களும் பாதிக்கப்படலாம். எனவே ஈக்கள், கொசு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாத்து வைத்தல் அவசியம். இல்லாவிடில் பேபஸியோஸிஸ், தெய்லிரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படும்.
சுகாதார ஊக்கிகள்/தொற்று நீக்குகள்
சூரிய ஒளி ஒரு சிறந்த தொற்று நீக்கி. தொற்று நீக்குதல் என்பது நோய் பரப்பும் கிருமிகளை அழித்தலே ஆகும். பிளீச்சிங் பவுடர், வாஷிங் சோடா, (washing soda), அயோடின் மற்றும் அயோடோப்பர், சோடியம் கார்பனேட், கால்சியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஆக்சைடு மற்றும் பீனால் போன்றவை தொற்று நீக்கிகளாகச் செயல் படுகின்றன.
பிளீச்சிங் பவுடர்
இது கால்சியம் ஹைபோ குளோரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் 39% சிறந்த தொற்று நீக்கியான குளோரின் உள்ளது.
அயோடின் மற்றும் அயோடோப்பர்
இதில் வினையூக்கியான அயோடின் 1-2% உள்ளது.
சோடியம் கார்பனேட்
சலவை சோடா. இதன் 4% சூடான கலவை சோடாக் கரைசலானது வைரஸ் மற்றும் ஒரு சில பாக்டீரியாக்களை அழிக்க வல்லது
கால்சியம் கலவைகள்
இந்த கால்சியம் கலவைகள் கொண்டு கழுவும் பொழுது தரை, சுவர் மற்றும் நீர்த்தொட்டிகளை பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கலாம்.
பீனால்
பீனால் (அ) கார்பாலிக் அமிலம் பூச்சைக் கொல்லியாக செயல்படுகிறது.
பூச்சிக்கொல்லிகள்
தொழுவங்களில் உணி பேண் போன்ற ஒட்டுண்ணிப் பூச்சிகள் கால்நடைகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்தும். இவை மண், தொட்டிகள் மற்றும் சுவர்கள் மூலமாகவும் எல்லா இடங்களுக்கும் பரவும். இவற்றைக் கட்டுப் படுத்த சிறிது பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம். நீர்ம நிலையில் உள்ள பூச்சிக்கொல்லிகளை கைவிசைத் தெளிப்பான் மூலமோ பஞ்சு அல்லது எஏதேனும் ஃபிரஷ் பயன்படுத்தலாம். இப் பூச்சி மருந்துகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை. ஆதலால் தண்ணீர் தீவனங்களில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
சானங்களை நீக்கி தொழுவத்தை சுத்தப்படுத்திவிட வேண்டும். தொழுவத்தை சுத்தப்படுத்த சுத்தமான நீரை உபயோகப்படுத்த வேண்டும். தீவனத் தொட்டிகளிலோ சேமிப்புக் கொட்டிலிலோ எந்த தீவனமும் இல்லாமல் மருந்து தெளிக்கும் முன்பு சுத்தமாக வைக்க வேண்டும்.
நீர்த் தொட்டிகளில் பாசான் (Algae) வளரும் அளவு வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்தல் வேண்டும். சரியான அளவு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவும். பால் கறப்பதற்கு முன்பு மருந்துகளைத் தெளித்தல் கூடாது. ஏனெனில் பால் காற்றில் உள்ள விஷத்தன்மையை எளிதில் எடுத்துக் கொள்ளும். எனவே பால் கறந்து முடித்தபின் மருந்து தெளிக்க வேண்டும்.
வழிமுறைகள்
முதலில் சானம், சிறுநீர் போன்றவற்றை இரும்புச்சட்ி வடிகால் மூலம் வெளியேற்றிவிட வேண்டும். அதேபோல் தழுவனத் தொட்டி சேமிப்புக் கிடங்களில் இருக்கும் தீவனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். நீர் தொட்டியை ஃபிரஷ் வைத்துச் சுரண்டி சுத்தப்படுத்த வேண்டும். நீர்த் தொட்டிகளுக்கு வாரம் ஒருமுறை சுண்ணாம்புப் பூச்சு பூச வேண்டும்.
மற்ற தரைகளையும் இதேபோல் சுத்தப் படுத்தி நீர்தெளிக்க வேண்டும். சுவர்களில் படிந்துள்ள சானி, அழுக்குகளை நீக்குதல் வேண்டும். பினால் 2%, சலவை சோடா 4% (கரைசல்) மற்றும் பிளீச்சிங் பவுடர் 30% அளவுள்ள கரைசலைத் தெளிக்க வேண்டும்.
சூரியவெளிச்சம் நன்கு தெழுவத்தில் விழுமாறு செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லிகளை சீரான இடைவெளியில் (குறிப்பாக மழைக் காலங்களில்) தெளிக்க வேண்டும். அவ்வப்போது பூச்சிக்கொல்லி கலந்த சுண்ணாம்புக் கரைசலை சுவர்களின் விரிசல் மற்றும் இடுக்குகளில் பூசினால் அங்குள்ள உணி, பேண், போன்றவை நீங்கும்.
பிற தடுப்பு முறைகள்
கால்நடைத் தொழுவத்தில் கன்றுகள் பால் கறக்கும் கொட்டில், மாடுகள், காளை மாடுகள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அமைப்புகள் இருக்க வேண்டும். தரை வழுக்குமளவு வழவழப்பாக இல்லாமல் சிமென்டால் பூசப்பட்டு சுத்தம் செய்ய எளிதாக இருக்க வேண்டும். மேலும் நீர், தீவனத்தொட்டிகள், சேமிப்புக் கிடங்குகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படவேண்டும். சிறுநீர் வடிகால்கள் சிறிதளவு குழியாகவும் அதில் ஓடுகள் வைத்து தேவையான போது அகற்றிக்கொள்ளுமாறு இருத்தல் நலம். தொழுவத்தில் ஆங்காங்கே நிழல்தரு மரங்களுடன் எப்போதும் சுத்தமாகக் காட்சியளிக்க வேண்டும்.