பயிர்களுக்கு ஆரோக்கியம் தரும் ஆர்கியபாக்டீரியல் கரைசல் தயாரிக்கும் முறை

தாவரங்களுக்கு அருகே சாணத்தை மட்டும் இடுவதால் எந்த பயனும் இல்லை. இந்த பணியை துல்லியமாக முன்னெடுக்க நுண்ணுயிரிகள் உள்ளன. ஆர்கியபாக்டீரியா ஒரு சிறந்த நுண்ணுயிரிகளாகும். சரியான முறையில் இந்த நுண்ணுயிர்களை பயன்படுத்தினால் நல்ல பலன்களை பெற முடியும். ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை.

தேவையான பொருட்கள்

  • 20 கிலோ சாணம்,
  • 200 லிட்டர் தண்ணீர்,
  • 3 கிலோ வெல்லம்,
  • 100 கிராம் கடுக்காய் தூள்,
  • 10 கிராம் அதிமதுரம்.

தயாரிக்கும் முறை

  • ஒரு கொள்கலனில் சாணம் மற்றும் வெல்லத்தை தண்ணீருடன் கலக்க வேண்டும்.
  • கடுக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். 250 மில்லி தண்ணீரில் அதிமதுரம் தூள் கொதிக்க விட்டுப் பின்னர் குளிர்விக்க வேண்டும்.
  • இந்த கரைசலை மேலே உள்ள கரைசலுடன் சேர்க்கவும். கொள்கலனில் மீதமுள்ள பகுதியை தண்ணீரை நிரப்பி காற்றுப் புகாதவாறு மூட வேண்டும்.
  • மீத்தேன் வாயு கொள்கலன் உள்ளே உருவாகி இருக்கும். ஒருசில முறை மூடியைத் திறந்து காற்றை வெளியே வருமாறு செய்யவும். கரைசல் பத்து நாட்களில் தயாராக இருக்கும்.
  • கரைசல் பழுப்பு நிறமாக மற்றும் ஒரு இனிமையான மணம் கொண்டதாக இருக்கும்.
  • தாவர வளர்ச்சி மேம்படும். ஆர்கியபாக்டீரியா அதே தாவரங்களால் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. பிற நுண்ணுயிரிகள் கூட இதை உட்கொள்கின்றன. நாம் இதனை நீல பச்சை பாசி வளர்ப்புக்கு பயன்படுத்த முடியும். இலை பரப்பு 15-20% அதிகரித்து காணப்பட்டது.

பயன்பாடு

  • ஒரு லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். அல்லது, பாசன நீருடன் பயன்படுத்த, இந்த கரைசலை ஏக்கருக்கு 200-300 லிட்டர் என்ற அளவில் பின்வரும் எதாவது ஒரு கரைசலுடன் கலந்து தெளிக்கலாம்: (அ) 30 முதல் 50 லிட்டர் செறிவூட்டப்பட்ட அமுதம் கரைசல், (ஆ) 5-20 லிட்டர் பஞ்சகாவ்யா, (இ) 5-10 லிட்டர் இளநீர்-மோர் / அரப்பு-மோர் கரைசல், (ஈ) 3 லிட்டர் மீன் அமிலம். இந்த நிலையில் நிலவும் நோய்களைக் கட்டுப்படுத்த பின்வரும் நுண்ணுயிரிகளைக் கலக்கலாம்.
  • ரைஸோஸ்பியரை மற்றும் புஸ்ஸாரியம் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும்.
  • வேர் முடிச்சு நூற்புழுக்கள் பசிலோமைசிஸ் லில்லாசினஸ் கொண்டு கட்டுப்படுத்தலாம்.
  • வேர் புழுக்களை கட்டுப்படுத்த பியூவீரியா பிராங்னியாரிட்டி மற்றும் மடர்ஹிசியம் பயன்படுத்தலாம். .

குறிப்பு

  • ஆர்கியபாக்டீரியல் கரைசல் பயன்படுத்தி நுண்ணுயிர்களை அதிகரிக்கலாம் மற்றும் இதனை பாசன நேரத்தில் கலந்து அளிக்க முடியும். குறிப்பிட்ட பயிர்கள் மற்றும் நோய்களுக்கு குறிப்பிட்ட, கரைசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பயிர் மற்றும் நோய் பொறுத்து பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். பாசன நீருடன் (பொடிகள் மற்றும் ஆர்கியபாக்டீரியல் கரைசல்) கலந்து அளிப்பதற்கு முன் ஒரு நாள் நொதிக்க விட வேண்டும்.
  • மேலே உள்ள ஐந்து கலவைகளை ஒவ்வொன்றாக பயன்படுத்துதல், மண் வளத்தை அதிகரித்து மற்றும் மண்ணில் அனைத்து நன்மை தரும் உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு நல்ல மற்றும் எளிய முறையாகும்.
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்