நெல் விவசாயத்தில் அதிக மகசூல் பெற கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள்

நெல் விவசாயத்தில் அதிக மகசூல் பெற விவசாயிகள் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் அளித்துள்ளேன். இது நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல பலன் கொடுக்கும். ஐந்து வகையான பிரிவுகளில் குறிப்புகள் கொடுத்துள்ளேன். அவைகளை இனி காண்போம்.

  1. மண் வளம் பராமரிப்பு
  2. விதை தேர்வு
  3. களை கட்டுப்பாடு
  4. பூச்சி / நோய் மேலாண்மை
  5. இடுபொருட்கள் நிர்வாகம்.

1.மண்வளம் பராமரிப்பு:

  • பல தானிய விதைப்பு
  • பசுந்தாள் பயிர் செய்தல்
  • ஊட்டமேற்றிய தொழு உரம்
  • மண் வளத்தை கூட்டும் ஊக்கிகளை உபயோகித்தல்

2. விதைதேர்வு & நாற்றங்கால்

  • கலப்படம் இல்லாத விதைகள்
  • உப்பு நீர் கரைசலில் முளைப்பு திறன் குறைந்த நெல்லை நீக்குதல்
  • உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி
  • விதைகள் ஒன்றோடு ஒன்று கலக்காமல் இடைவெளி கொடுத்து நாற்று விடுதல்
  • 5ம் நாள் – பஞ்சகாவிய தெளிப்பு
  • 7ம் நாள் – கற்பூர கரைசல் தெளிப்பு
  • 10ம் நாள் – பஞ்சகாவிய தெளிப்பு

3. களை கட்டுப்பாடு

  • குறுகிய கால ரகங்களுக்கு 4 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 3 நாட்கள் இடைவெளியில்.
  • மத்திய கால ரகங்களுக்கு 6 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 3 நாட்கள் இடைவெளியில்
  • நீண்ட கால ரகங்களுக்கு 8 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 3 நாட்கள் இடைவெளியில்
  • ஒரு முறை கை களை எடுக்க வேண்டும்

4. பூச்சி/ நோய் மேலாண்மை

  • நடவு செய்த 20ம் நாள் கற்பூர கரைசல் spray
  • நடவு செய்த 35ம் நாள் கற்பூர கரைசல் spray
  • நடவு செய்த 50ம் நாள் கற்பூர கரைசல் spray
  • நடவு செய்த 70ம் நாள் கற்பூர கரைசல் spray
  • நடவு செய்த 90ம் நாள் கற்பூர கரைசல் spray
  • நடவு செய்த 110ம் நாள் கற்பூர கரைசல் spray
  • நடவு செய்த 130ம் நாள் கற்பூர கரைசல் spray
  • நடவு செய்த 150ம் நாள் கற்பூர கரைசல் spray

பயிர்களின் வயதை பொறுத்து மேலே உள்ள தெளிப்புகளின் எண்ணிக்கையை கூட / குறைத்து கொள்ளவேண்டும். தேவைக்கு ஏற்றார் போல உயிர் உர பூச்சி / பூஞ்சாண கொல்லிகளை பயன் படுத்தி கொள்ளுங்கள்.

5. இடுபொருட்கள் நிர்வாகம்

  • மண் வளத்தை கூட்டினால் தான் மகசூலில் நிறைவு கிடைக்கும் .
  • கடைசி உழவுக்கு முன் 500 to 600 kg ஊட்டமேற்றிய தொழு உரம் + 50 kg கரித்தூள் கலந்து இடவும்
  • ஒவ்வொரு முறை கோனோவீடர் ஓட்டுவதற்கு முன் நாள் ஏக்கருக்கு 100 to 150 kg ஊட்டமேற்றிய தொழு உரம் + 10 kg கரித்தூள் கலந்து இடவேண்டும்
  • பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 200 liter ஜீவாமிர்தம் / அமிர்த கரைசல் விடவேண்டும்
    பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter EM கரைசல் விடவேண்டும்
  • பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter EM கரைசல் விடவேண்டும்
  • பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter மீன் அமிலம் கரைசல் விடவேண்டும்
  • பாசன நீர் வழியாக 30 நாட்களுக்கு ஒரு முறை 3 liter Humic acid கரைசல் விடவேண்டும்.
  • குறுகிய கால பயிர்களுக்கு 2 முறை, மத்திய கால பயிர்களுக்கு 3 முறை
  • நீண்ட கால பயிர்களுக்கு 4 முறை பஞ்சகாவியா 3 liter + தேவையான அளவு ஓடை மண்ணில் கலந்து வயலில் 30 நாட்களுக்கு ஒரு முறை உரம் இடுவது போல இடவேண்டும்

தெளிப்பு வளர்ச்சி ஊக்கிகள்

ஒவ்வொரு வளர்ச்சி ஊகிக்கும் இடைவெளி 7 நாட்கள் என கருத்தில் கொண்டு தெளிக்க வேண்டும்.

  • 1st EM கரைசல் 150 ml / tank
  • 2nd மீன் அமிலம் 50 ml / tank
  • 3rd EM கரைசல் 150 ml / tank
  • 4th பஞ்சகாவியா 150 ml / tank
  • 6th 15 நாட்கள் புளித்த தயிர் 500ml/ tank
  • 7th EM கரைசல் 150 ml / tank
  • 8th மீன் அமிலம் 50 ml / tank
  • 9th EM கரைசல் 150 ml / tank
  • 10th பஞ்சகாவியா 150 ml / tank
  • 11th 15 நாட்கள் புளித்த தயிர் 500ml/ tank

மேலே உள்ள கரைசல்களை பயிரின் வயதுக்கு ஏற்ப குறைத்து கொள்ளலாம். இந்த தெளிப்பு முறையை வயலில் ஒன்று இரண்டு கதிர்கள் வரும் வரை தெளிக்க வேண்டும். ஒரு சில கதிர்கள் வெளி வந்தவுடன் தேமோர் கரைசல் 500 ml / tank. 3 நாள் இடைவெளியில் 3 முறை spray செய்யவும். பூக்கள் polination முடிந்து பால் பிடிக்கும் வரை பூச்சி விரட்டி தவிர்த்து எதையும் தெளிக்க கூடாது. பூ இருக்கும் காலங்களில் sprayer நேரடியாக பயிரின் மீது படுமாறு தெளிப்பதை தவிர்க்க வேண்டும். பால் பிடிக்கும் தருணத்தில் தேங்காய் பால் + மீன் அமிலம் 1:1 அளவில் கலந்து 4 நாட்களுக்கு ஒரு முறை என 3 தெளிப்பு. அதை தொடர்ந்து 7 to 10 daysonce மீன் அமிலம் 70ml/tank spray செய்யவும். வளமான மகசூல் பெற மண்ணின் வளத்தை கூடுவது.. மண்ணுக்கு சத்தை வழங்குவது மிகவும் முக்கியம்.

 

நல்ல மகசூல் பெற்று மனம் மகிழ்ச்சி அடைய வாழ்த்துக்கள்..

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்