இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி?

பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை விரட்ட சிறந்த இயற்கை வழி பூண்டு கரைசல் ஆகும். இந்த கரைசல் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்க கூடியது. அதேபோல் பயிர்களுக்கு எந்தவித சேதத்தையும், கெடுதலையும் தரக்கூடியது அல்ல. ஆதலால் விவசாயிகள் இந்த இயற்கை பூச்சிவிரட்டியான பூண்டு கரைசலைப் பயன்படுத்தலாம். இதை எப்படி மிக எளிமையாக பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பூண்டு – 300 கிராம்,
மண் எண்ணை 150 மிலி.

பூண்டை மண் எண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும். 60 லிட்டர் நீரில் சேர்த்து ஒரு ஏகர் நிலத்தில் பயன்படுத்தலாம்.

கட்டு படுத்த படும் பூச்சிகள்:

  • பருத்தி காய் துளைப்பான்
  • அசுவினி
  • படை புழு
  • நெல் செம்புள்ளி நோய்
  • கொலராடோ வண்டுகள்
  • பருத்தி சிவப்பு பூச்சி
  • அந்து பூச்சி வீடு ஈ
  • முட்டைகோஸ் புழு
  • ஜப்பானிய வேர் முடுச்சு புழு
  • மேசிக்கன் அவரை வண்டு
  • சிவப்பு சிலந்தி
  • கொசு
  • வெங்காய இளைப்பேன்
  • பயிறு வண்டு
  • வேர் முடிச்சு புழு
  • வெள்ளை ஈ
  • கம்பி புழு
  • கரும்பு குருத்து புழு
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்